ஆகஸ்ட் மூன்றாம் வாரம் கொரோனா மூன்றாம் அலை உச்சத்தில் இருக்கும் என்றது ஐசிஎம்ஆர், செப்டம்பர் இரண்டாம் வாரம் இந்தியாவில் மூன்றாம் அலை உச்சத்தில் இருக்கும் என்றது உலக சுகாதார மையம்.
இவற்றுக்கு நேர்மாறாக கட்டுக்குள் இருக்கிறது நோய்த்தொற்று. நாணு முழுக்க கொரோனாவே இல்லையென்று சொல்ல முடியாவிட்டாலும் கட்டுக்குள் இருக்கிறது.
சிக்கிம், ஹிமாச்சல் பிரதேஷ், லடாக், கோவா, டையூ, டாமன் ஆகியவை இந்தியாவில் 100% தடுப்பூசி செலுத்திய மாநிலங்கள். தமிழகத்தில் முழுநாள் தடுப்பூசி முகாம்கள் அமைத்து ஊசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கையை பெருமளவு உயர்த்துகிறது தமிழக அரசு.
மூன்றாம் அலை வந்திருந்தால், பாதிப்புகள் இருந்திருந்தால், ‘பாத்தியா!’ என்று குறை சொல்லியிருப்போமே, அது நடக்கவில்லை, கட்டுக்குள் இருக்கிறதென்றால் பாராட்டலாம்தானே!
மொத்த நாட்டிற்கும் ‘சபாஷ்!’
– மணக்குடி மண்டு
28.09.2021