இந்த ஊரடங்கு – வீட்டடங்கு காலத்தில் மட்டும் நடந்த மலர்ச்சி மாணவர்களுக்கான மூன்று வளர்ச்சிப்பாதைகள் நேரலை, கார்காத்தார் பிஸினஸ் ஃபோரம், கோவை – ஈரோடு – கரூர் டெக்ஸ்டைல்ஸ் அசோஸியேஷன் ஆகியவற்றிற்கான ‘மலர்ச்சி உரை’ நேரலை என இது வரை நேரடியாக 6,000 பேர் பார்த்திருக்கிறார்கள் பயன் பெற்றிருக்கிறார்கள். ‘நிமிர்ந்து உட்காருகிறோம்! தெளிவாக புரிந்து கொண்டோம், நம்பிக்கையாக இருக்கிறோம்!’
என்ற வகை செய்திகளையே பதிவு செய்திருக்கிறார்கள்.
இன்னும் சிறிது நேரத்தில் சீட்டாஸிஸ் – ரைஸ் அமைப்புகளுக்கான மலர்ச்சி உரை நேரலை.
கருவாக்கி உருவாக்கி எனையாண்டு
காத்தருளும் இறைவா நன்றி!
வல்லமை தந்து நீ வளர்ச்சி கொடு!
அகத்திலும் புறத்திலும் மலர்ச்சி கொடு!
மகிழ்வுடன்,
பரமன் பச்சைமுத்து
சென்னை
19.04.2020