உடல் எடை கொண்டு தசை வலிமை செய்தல், தடகளம், ஓட்டம் என சில வித உடற்பயிற்சிகளை கலந்தும் மாற்றி மாற்றியும் செய்யும் எனக்கு மூச்சுப் பயிற்சியோடு இயைந்த யோக ஆசனங்கள் செய்யும் போது ஏற்படும் நிலை எதையும் தாண்டியது. அந்த ஆழ்ந்த சீரான மூச்சும், நெஞ்சுக் குழியை சுற்றிலும் ஏற்படும் உன்னத உணர்வும், உடலெல்லாம் ‘சார்ஜ் ஏற்றப்பட்ட யூபிஎஸ்’ போன்ற நிலையும் சொல்லவொண்ணா உணர மட்டுமே முடிந்த அனுபவங்கள். அப்போதெல்லாம் என் வாய் முணுமுணுக்கும் வார்த்தைகள், ‘யோகாவை முதன்முதலில் உலகிற்குத் தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!’
நல்ல பலன் வேண்டுவோர்க்கு, ‘யோகா தினம்’ அல்ல, ‘தினம் யோகா!’
#InternationalYogaDay
- பரமன் பச்சைமுத்து
சென்னை
21.06.2020