சென்னையில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை என்றிருக்கும் நிலையில், நோய்த்தொற்று குறையாது அதிகரிக்கும் என்று ஒரு கணிப்பைச் சொல்லியிருக்கிறது எம்ஜியார் பல்கலைக்கழகம். ஜூலை 15ல் 1,50,254 பேர்கள் சென்னையில் நோய்த்தொற்றுக்கு ஆளாகியிருப்பார்கள், இறப்பு எண்ணிக்கை 1,654ஆக இருக்கும், செப்டம்பரில் தொற்று உச்சத்தைத் தொடும், அதன் பின்னர் படிப்படியாக குறையும் என்கிறது அவர்களது கணிப்பு.