தமிழக அரசிற்கு பாராட்டுகள்

கடந்த வாரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது மருத்துவமனைகளில் படுக்கைகள் இருக்கின்றன. ஆக்ஸிஜன் கிடைக்கின்றன. உள் கிராமங்களில் சில இடங்களில் இன்னும் பிரச்சினைகள் உள்ளன என்றாலும் சமாளிக்கும் நிலைக்கு வந்தாயிற்று. இனி நிலைமை முன்னேறவே செய்யும்.

கட்சி சார்பு – எதிர்ப்புகளை ஒத்தி வைத்துவிட்டுப் பார்த்தால், சமாளித்து சரியாக செயல்பட்டிருக்கிறது ஸ்டாலின் அவர்களின் தமிழக அரசு என்பதை பாராட்டியே ஆக வேண்டும்.

….

அதைப்போலவே, ‘மத்திய அரசு ஒன்றுமே செய்யவில்லை!’ என்று சிலர் கட்டுவதையும் மறுத்தே ஆக வேண்டும். இன்னும் மேம்பட்டிருக்கலாம் என்று கூறலாம், அதற்காக, ‘மோடி ஒண்ணும் பண்ணல!’ என்று எதற்கும் அரசியல் செய்பவர்கள் செய்யவே செய்வார்கள்.

ஒன்றிய அரசிடமிருந்து வந்த 95.59 லட்சம் தடுப்பூசிகளில் 89 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பயன்படுத்தாமல் வீணாகியது போக 1000 ஊசிகள் கையில் உள்ளன என்கிறார் சுகாதாரத்துறை அதிகாரி.

‘மோடி ஒண்ணுமே பண்ணல என்கிறார்களே. அப்படியானால் அவர் தூங்கும் போது அவருக்குத் தெரியாமல் 95.59 லட்சம் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டு ஓடி வந்து விட்டார்களா தமிழகத்திற்கு!!’ இருக்கும்!

….

தமிழக அரசிற்கு… பாராட்டுகள்!

– மணக்குடி மண்டு
02.06.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *