காவலர் தாக்கி போதையிலிருந்தவர் உயிரிழந்த விவகாரத்தில், நடவடிக்கை எடுத்துள்ள முதல்வரின் அறிக்கையில் இரண்டு மகிழ்வு தரும் சங்கதிகள் உள்ளன.
( உயிரிழப்பு என்பது கொடுமை, பெரும் இழப்பு. வருத்தம் என்பதை மறுக்கவே முடியாது)
1. காலந்தாழ்த்தாமல், எதிர்க்கட்சிகளும் விவாத மேடைகளும் பேசும் வரையில் காத்திருக்காமல் உடனடியாக முதல்வரின் கவனம் பெற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
2. போலீஸ் என்றாலே பொதுமக்களுக்கு எதிரானவர்கள் என்று பொத்தாம்பொதுவாக காட்டப்படும் அனுமானத்திற்கு எதிராக, முதல்வர் தம் அறிக்கையில், ‘ வாகன தணிக்கை செய்த போது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆத்திரமடைந்த காவலர்..’ என்று வாகன ஓட்டிகளின் செயலையும் குறிப்பிட்டுள்ளது நன்று.
– மணக்குடி மண்டு
24.06.2021