மாலை மஞ்சள் வெயிலும்
நீள நீல வானும்
அறுவடை முடிந்த அன்னவயலும்
ஓங்கி வளர்ந்த ஒத்தப் பனையும்
ஆளரவமே இல்லா வெளியில்
ஆட்காட்டி குருவியின் ஆரவாரமும் என
வாய்க்காங்கரையில் வாயெல்லாம் பல்லாக நான் கொண்டது நாட்படு தேறல் அனுபவம்!
- பரமன் பச்சைமுத்து
மணக்குடி
30.07.2021