கஸ்தூரி ரங்கன் பரிந்துரைத்த புதிய கல்விக் கொள்கை மொத்தமும் தேவையில்லை என்று நேற்று எதிர்க்கட்டியாகப் போராடி விட்டு, இன்று புதிய கல்வி கொள்கையை நோக்கி திட்டம் என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு. நல்ல செயல். நல்ல மாற்றம். புதிய கல்விக் கொள்கை தேவை. நல்ல நகர்வு.
10 ஆண்டுகளில் 1000 தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் என்பதை கை தட்டி வரவேற்கிறேன். இது சரியாக செயல்படுத்தப்படுமானால் மிகச் சிறந்த நல்விளைவுகளை ஏற்படுத்தும் தமிழகத்திற்கு. (முந்தைய அரசின் பாலாறு தடுப்பணையின் பலனை கண்ணெதிரே காண்கிறோம்!)
சித்த மருத்துவத்திற்குத் தனிப் பல்கலைக்கழகம் என்ற முடிவு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. எழுந்து நின்று வரவேற்கிறேன். தமிழக வளர்ச்சி ஆலோசனை குழுவின் மருத்துவர் கு சிவராமன் அவர்களுக்கு பெரும் நன்றி! இது முக்கியமான நகர்வு.
– பரமன் பச்சைமுத்து
14.08.2021