‘வாட் ஈஸ் எக்ஸ்டஸி?’
பல்வேறு பணிகளுக்கிடையே, எதை எழுவது எதைப்பற்றி எழுதுவது என்று தெரியாத ஆனால் பத்திரிக்கைக்கு முக்கிய முகப்புக் கட்டுரை கொடுத்தே ஆகவேண்டும் என்ற கெடு நிலையில், உட்கார்ந்து ஓர் அலைவரிசையில் ஏதோவொன்று பிடிபட்டு உள்ளுக்குள் அது வடிவமெடுக்க அதை எழுதத்தொடங்கி சுற்றியுள்ள உலகையே மறந்து லயித்து முடிக்கும் போது, மொத்தமாக ஒரு நல் வடிவம் பெற்று அது நிற்கும் போது ‘அடேய்!’ என்று ஓர் ஆழ் உணர்வு வருமே அது எக்ஸ்டஸி, பீறிட்டுப் பொங்கி மண்டை பற்றிப் பரவும் குபீர் உற்சாக போதை!
( நான் சரியான எழுத்தாளனா தெரியாது. ஆனால் எழுத்தை அனுபவிக்கிறேன்!)
– பரமன் பச்சைமுத்து
30.01.2022