தீண்டித் தின்பது

அடியே….

காதல் என்பது தீண்டித் தின்பது

முதலில் காதலர் தின்பர் – பிறகு காதல் அவர்களைத் தின்னும்

தின்பது இன்பம்
தின்னப்படுவது இன்னும் பேரின்பம்

தின்னத் தின்ன தெவிட்டிடும் உலகில்
தின்னத் தின்ன தெவிட்டாதது காதல் மட்டுமே, காமம் கலந்த காதல் மட்டுமே

காதல் என்பது வெறும் வாயால் அல்ல, ஐம்புலன்களால் தின்னுவது

தீண்டலில் தொடங்கி தின்பதில் செழிக்கிறது காதல்

கண்களால் தீண்டி,
நாசியால் – வாயால் – விரலால் – உடலை உடலால் தீண்டி தின்பது காதல்

காதலில் மட்டுமே தின்பவர் தருபவர் என இருவரும் தன்னையே தந்த நிலையில் கிடக்கின்றனர்

  • சிவநெறித்தேவன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *