கடற்புரத்து மீட்பர்கள், நல்ல திட்டம்!

சில நல்ல மனிதர்கள், நல்ல அமைப்புகள் முன்னெடுக்கும் நல்ல திட்டங்கள், செயல்பாடுகள் அரசின் கவனத்திற்குப் போவது நன்று. எந்த வித ‘ஈகோ’வும் இல்லாமல் அதை ஏற்று அவர்களோடே கை கோர்த்து அதை இன்னும் விரிவாக பரவலாக செய்வது அரசு செய்யும் அடுத்த உயர் நிலை நற்செயல்.

சில ஆண்டுகளாக கடற்புரத்து மீனவ இளைஞர்களை தேடிப்பிடித்து கருவிகள் தந்து உயிர்காக்கும் பயிற்சிகள் தந்து மீட்புப் படையாக அவர்களை தயார் செய்து கொண்டிருந்த தன்னார்வ தனியார் நிறுவனத்தின் முன்னெடுப்பு தமிழக அரசின் கவனம் பெற்று, தமிழக முதல்வரே இறங்கி அதை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல 14 மாவட்டங்களுக்கு விரிவு படுத்தி புதிய திட்டமாக தொடங்கி வைத்துள்ளார்.

இது நல்லது. பிறவிலேயே கடல் அறிந்த கடற்புரத்து இளைஞர்கள் நவீன கருவிகளும் பயிற்சகளும் கொண்டு உயர்திறன் பெறுவர், மேம்படுவர்!

அந்தத் தன்னார்வ தனியார் நிறுவனத்திற்கும், தமிழக அரசுக்கும் பாராட்டுகள்!

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
09.06.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *