வகுப்பென்பது மாணவரும் ஆசிரியரும் தங்களைத் தந்து நிற்கும் ஒரு வகைத் தவம். கண்கள், செவிகளைக் கொண்டு ‘வை ஃபை’யைப் போல உருவாக்கப்படும் கம்பியில்லா தொடர்பில் உட்கருத்தும், உணர்வுகளும், உயிராற்றலும் கடத்தப்படும் சாலை.
வகுப்பு என் உயிர் ஊறும் இடங்களில் ஒன்று.
சிறந்த ஆசிரியர்கள் மாணவர்களை உருவாக்குவதைப் போலவே, சிறந்த மாணவர்களால் ஆசிரியரின் அகம் மேம்படுகிறது என்ற தனிக்கருத்து உண்டெனக்கு.
ஆகச் சிறந்த ஆசிரிய நிலை என்பது அகத்திலே மாணவ நிலை கொள்ளலே. கற்பித்தலின் அடிநாதமே கற்றல், தொடர்ந்து கற்றல். கற்றல் தீர்ந்தால் கற்பித்தல் நீர்ந்து போகும்.
நல் ஆசிரியர்கள் பெற்ற மாணவர்கள் வாழ்க! நல் மாணவர்கள் சூழ்ந்த ஆசிரியர்கள் வாழ்க!
– பரமன் பச்சைமுத்து
கிழக்குக் கடற்கரை சாலை
13.08.2022
#Teacher #Student #Classroom #Class #MalarchiClassroom #MalarchiClass #Malarchi #MalarchiMaanavargal #Master