மு பச்சைமுத்து அவர்களின் முதல் குருபூசையில் மு பச்சைமுத்து அறக்கட்டளையில் வெளியிடப்பட்ட நூல் ‘சிவ வழிபாட்டு மாலை’.
மணக்குடி (மணியார் வீட்டு) நடராஜன் ஐயரின் மகள் வயிற்றுப் பேரன் சென்னை சைதாப்பேட்டையில் இந்த நூலிலிருந்து சிவபுராணம் கற்றிருக்கிறான்.
எல்லோரையும் சிவபுராணம் சொல்லச் சொல்லும் அப்பா, இதோ இதைத்தான் விரும்பியிருப்பார்!
இந்நூலின் நோக்கம் என்று அதன் முன்னுரையில் சொன்னதில் ஒன்று நடக்கிறது. மகிழ்ச்சி!
வானிலிருந்து வாழ்த்தட்டும் தந்தை இச்சிறுவனையும், நம்மையும்.
வாழ்க! வளர்க!
- பரமன் பச்சைமுத்து
மு பச்சைமுத்து அறக்கட்டளை
04.10.2021