இயக்குநர் சிகரம் பாலசந்தர் சாரின் பாசறையிலிருந்து வந்தவர் என்பதைத் தாண்டி, ‘எஸ்பிபியை இப்படிப் பார்க்கிறாரே இவர்!’ என்று வியக்க வைத்து, அதை நமக்கும் கடத்தி எஸ்பிபி மீதான நம் பார்வையின் அடர்த்தியையும் கூட்டிவிட்டுப் போன திரைப்பட இயக்குநர் வசந்த் அவர்களோடு, நேற்று சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஜீரோ டிகிரி பப்ளிஷிங் அரங்கில் கொண்ட அளவளாவுதல் சில நிமிடங்களேயானாலும், நாங்கள் உண்டு மகிழ்ந்த இனிப்பும் காரமும் போல் சுவையாக இருந்தது.
வாசிப்பதற்கான நன்னூல் வேட்டைக்கு வந்திருந்தார். சிந்திக்க வைத்தது அவரது இயல்பு.
பெரிய மனிதர்கள் எளிமையாக இருக்கிறார்கள்!
#DirectorVasanth
#ZeroDegreePublishing
#ChennaiBookFair
#Paraman