காஷ்மீரில் ஏற்கனவே அலுவல் மொழியாக இருந்த உருது, ஆங்கிலத்தோடு, மக்ளிடம் பேசப்பட்டு வந்த டோக்ரி, காஷ்மீரி, இந்தி ஆகிய மூன்றையும் சேர்த்து ஐந்து மொழிகளையும் அலுவல் மொழியாக்கியிருக்கிறார்கள்.
‘என்னாது, இவ்ளோ நாளா காஷ்மீர்ல காஷ்மீரி மொழியே அலுவல் மொழியாக இல்லையா!’ என்ற அதிர்ச்சியைக் கடந்து வரும் எண்ணம் – ஐந்து அலுவல் மொழியா! அப்படியானால், இந்தியாவின் 22 மொழிகளையும் அலுவல் மொழியாக சேர்த்து சட்டம் போடலாமே! ( ‘தமிழாற்றுப்படை’ நிகழ்ச்சியில் கவியரசு வைரமுத்து ’22 மொழிகளையும் தேசிய மொழிகளாக அறிவிக்க வேண்டும்’ என்று சொல்லி என் கவனம் ஈர்த்தார் )
இதை யாராவது முன்னெடுங்களேன்.
வாழ்க!
– பரமன் பச்சைமுத்து
03.09.2020