‘தம்பி, மணக்குடியிலேருந்து எல்லாரும் வந்தாங்க. ரெண்டரை வயசு வால் பையனையும் ஏழரை வயசு பொண்ணையும் கூட்டிட்டு கணவன், மாமியாரோடு ஒரு மனுஷியும் வந்தா. முருகனை கும்புடலாம்னு வந்தா.’
‘சரி!’
‘இதோ இந்த இடத்தில, இந்த இடத்திலதான் அவளை மட்டும் இங்கயே நிறுத்திட்டு, குழந்தைகளை தூக்கிட்டு கோயிலுக்குப் போய்ட்டாங்க கணவனும் மாமியாரும் மத்தவங்களோட.’
‘ஏன்? ஏன் அந்த மனுஷி மட்டும் போகலை?’
‘வீட்டுத்தூரம் (மாத விலக்கு). வெளியவே ஒக்கார்ந்திருந்தா அந்த மனுஷி’
‘இந்தக் கோவிலா?’
‘ஆமாம். இந்த இடம்தான் நின்ன இடம்!’
‘யாரு அந்த மனுஷி?’
‘நாந்தாண்டா தம்பி!’
‘ஓ! அப்ப அந்த ரெண்டரை வயசு வாலு பையன்?’
‘நீந்தான்!’
‘ஓ மை காட்! ஐம்பது வருஷம் கழிச்சி அதே கோயிலுக்கு கூட்டி வந்துருக்கேனா? அட்டகாசம்! வாம்மா, கையைப் புடிம்மா, கோயிலுக்குள்ள கூட்டிட்டுப் போறேன்!’
வணக்கம் திருப்பரங்குன்றம்!
…..
திருச்செந்தூரில் சூரபதுமன் பிரதர்ஸ் போர் ‘ப்ராஜெக்ட்டை சூப்பர் சக்ஸஸ்’ஸா முடித்ததால், முருகனுக்கு கொடுக்கப்பட்ட சூப்பர் ஹேப்பி செலிபிரேட்டிவ் போனஸ் – தேவேந்திரன் மகள் தெய்வயானை! அந்த திருமணம் நடந்த இடம் திருப்பரங்குன்றம்.
(அதனால்தான் அந்த ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்!’ பெங்களூர் ரமணியம்மாள் பாடல்!)
‘பரம்’ பொருள் பரமன் குன்றாக நின்றதால், அது திருப்பரங்குன்றம். திருவண்ணாமலையைப் போலவே இந்த மலையை சிவனாகவே வழிபடுகின்றனர். 190மீ மலையில் பழமையான குடைவரைக் கோயிலில் முருகனின் படைவீடு இருக்கிறது.
திருமணக் கோலத்தில் இருப்பதால் மாப்பிள்ளை முருகன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.
‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ நக்கீரர் வழிபட்ட ‘திருமுருகாற்றுப்படை’ செய்த கோவில்.
: அம்மா – ஆலய தரிசனம் – அறுபடைவீடு
-பரமன் பச்சைமுத்து
திருப்பரங்குன்றம்
17.06.2025
#ParamanTouring #பரமன்பச்சைமுத்து #amirthampachaimuthu #ParamanPachaimuthu #arupadaiveedu #travel #ParamanLifeCoach #Thiruparangundram #lordmurugan #திருப்புகழ் #Thirupugazh #திருப்பரங்குன்றம்