பொரி கடலை

exclamation

வியப்பில்லா இயந்திரங்களைக் கண்டு வியக்கிறேன்

ஒரு பயணித்தின் இடையே புதுச்சேரியில் உணவருந்திவிட்டு திரும்ப தொடர்ந்த போது, ஒரு வெண்ணிறக் கட்டடத்தைப் பார்த்து என் மகள்கள் ஒரு சேரச் சொன்னது, ‘வாவ்!’ வியக்குமளவிற்கு இதில் என்ன இருக்கிறது? இது ஒரு கட்டிடம் அழகாக இருக்கிறது. அவ்வளவுதான்! ‘வாவ்’ எதற்கு? – என்பதே என் எண்ணமாக இருந்தது. ‘எந்திரன்’ திரைப்பட சிட்டி ரோபோவிற்கு வியப்பு… (READ MORE)

Self Help, பொரி கடலை

, , ,

House_Crow_in_Kolkata

காக்கை அணிலோடு மதிய உணவு

எட்டு காக்கைகளோடும், ஓர் அணிலோடும் பகிரும் அனுபவமாய் அமைந்தது என் இன்றைய மதிய உணவு! ஆறு மணிக்காக்கைகள் கீரைச்சோற்றையும், இரு அண்டங்காக்கைகள் தயிர் சோற்றையும், இவைகள் கொத்தி விட்ட மற்ற எல்லாவற்றையும் அணிலும் உண்டன. என் தட்டைக் கழுவி, நீர் நிரப்பி வைத்ததும் ஒன்பது உயிர்களும் பருகின என்பது என் பரவசம்.  (மலர்ச்சி அலுவலகம் மேலே)… (READ MORE)

பொரி கடலை

aram1

ஆழ்ந்து அசந்து போக வைத்த எழுத்து – ஜெயமோகன்

நாடகம் போடும், நிறைய எழுதும், சாமி கும்பிடுதல் என்ற ஒன்றே இல்லாத வாழ்வைக் கழித்த ஒரு முற்போக்கு எழுத்தாளன் முதுமைக்குள் நுழையும் போது அடி முதுகில் திருகு வலி வந்து நிற்க முடியாமல் நடக்க முடியாமல் படுக்க முடியாமல் பெரும் அவதியில் அல்லல்படுகிறான். உள்ளே வெறுமை வந்து தின்ன, எழுந்து நிற்கவே முடியாத நிலை கொண்ட,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , ,

மனதில் நீர்வார்த்த வானிலை அறிக்கை!

வட இந்தியாவில் தலைவிரித்தாடுகிறது தண்ணீர்ப் பஞ்சம், நீரின்றி தவித்து வறட்சியால் கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது, சட்லஜ் – பாக்ரா நங்கல் நீர்ப் பிரச்சினை பெரிதாக வெடிக்கிறது, ‘ஐபிஎல்’ஐயே தடை செய்யவேண்டும் என்ற பொதுநலவழக்குப் போடுமளவிற்கு மகாராஷ்டிரத்தில் தண்ணீர்ப் பஞ்சம் என்று தினம் வரும் செய்திகளைப் படித்து விட்டு மாநில செய்திகளைப்… (READ MORE)

பொரி கடலை

அமெரிக்க அதிபர் கியூபா பயணம் பற்றி அன்றே சொன்ன ஃபிடல் காஸ்ட்ரோ

‘கருப்பின மகனொருவன் அமெரிக்க ஜனாதிபதியாகவும், லத்தீன் அமெரிக்க மனிதரொருவர் ‘போப்’ ஆகவும் இருக்கும் நாளில்… அமெரிக்கா நம்மிடம் வந்து பேசும்!’ என்று ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து மூன்றிலேயே சொன்ன ஃபிடல் காஸ்ட்ரோ பிரமிக்க வைத்துவிட்டார்! ‪#‎American‬ President in Cuba after 88 years. Present Pope is from ‪#‎Argentina

பொரி கடலை

, ,

Chennai-Copy

‘நம்ம சென்னை’!

அதிகாலைப் பனியில் ‘க்க்கோவ்வ்வ்…’ என்று குரலெழுப்பும் அதே ஆர் ஏ புரத்து மாமரத்துக் குயில்… அரை மணி நேரத்தில்  கடக்கும் ஆயிரம் வாகனங்கள், அவை கிளப்பும் சத்தம், கக்கும் புகை, சுட்டெரிக்கும் சூடு, இவைகளைத் தாண்டி சேத்துப்பட்டு சிக்னல் இடப்புற சுவர்மீது மலர்ச்சியோடு சிரிக்கும் மஞ்சள் மலர்கள்… ‘யோவ் பெருசு, போலீஸ்தான் இல்லியே, போமாட்ட?’ என்று… (READ MORE)

ஆ...!, பொரி கடலை

, , , , , , , ,

mental-hed - Copy

மனநிலை?

‘மனநிலை சரியில்லாத மகனை சுத்தியால் அடித்துக் கொன்ற பெற்றோர்!’ என்ற செய்தி படிக்கையில் எழும் கேள்வி, ‘யாருக்கு மனநிலை சரியில்லை?’

ஆ...!, பொரி கடலை

wpid-images1.jpg

விகடன் விருதுகள்…

அனிருத்தின் தர லோக்கலுக்கு ‘மாரி’ தனுஷ் போட்ட குத்தாட்டத்திற்கு, ‘காக்கா முட்டை’ படத்திற்கு, சிறுவர்களுக்கு மற்றும் இயக்குநருக்கு, ‘மாயா’ மற்றும் ‘காதும்மா’வாக வடிவெடுத்து உயர்ந்து நிற்கும் நயன்தாராவிற்கு, புத்தரின் அமைதியும் அபிமன்யுவின் தீவிர செயல்பாடுகளையும் கொண்ட அபூர்வ கலவை ‘சித்தார்த் அபிமன்யூ’ ‘தனி ஒருவன்’ அர்விந்த் சாமிக்கு, ‘மௌவாலா வா சலீம்’ பாடலுக்காக ஏ.ஆர். அமீனுக்கு,… (READ MORE)

பொரி கடலை

, , , , , , , , , , , ,

Perungu

நல்லதைப் பாராட்டுவோம் – பெருங்குடி ஏரி காக்கும் பேரார்வலர்கள்…

இரண்டு லட்சம் பேர் வெறுமனே புலம்பிக் கொண்டிருப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை, இருபது பேர் இறங்கிச் செய்தால் எல்லாம் மாறும் என நிரூபித்திருக்கிறார்கள்  ‘பி-எல்-ஏ-என்’ (பெருங்குடி லேக் ஏரியா நெய்பர்ஹூட்) தன்னார்வலர்கள்.  பெருங்குடி ஏரிக்குள் இறங்கி பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி ஏரியை சுத்தம் செய்கிறார்கள். ஜனவரி இருபத்தியாறன்று ‘பெருங்குடி ஏரித் திருவிழா’ கொண்டாடுகிறார்கள். பெய்யெனப் பெய்த பேய்… (READ MORE)

பொரி கடலை

vetti

வேட்டி ‘தினம்’!

தமி்ழர் பற்றி அதிகம் பேசாதவர் என் தந்தை. தமிழை உயிராகக் கொண்டு தமிழனாகவே வாழ்கிறார் கிராமத்தில் அவர். தமிழர் பற்றி அதிகம் பேசி, ஆங்கிலம் அதிகம் பேசி அவ்வப்போது தமிழில் பேசி தமிழ் வளர்ப்பது பற்றி நிறைய பேசி நகரத்தில் வாழ்கிறேன் நான். அவருக்கு வேட்டி ‘தினம்’. எனக்கு ‘வேட்டி தினம்’! அப்பாவைப் போல, பாட்டனைப்… (READ MORE)

பொரி கடலை

aram - Copy

ஜெயமோகனோடு அதிக பரிச்சயமில்லை எனக்கு. ஆனால்..

ஜெயமோகனோடு அதிக பரிச்சயமில்லை எனக்கு. பெங்களூர் வாழ் காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் படித்திருக்கிறேன். மணக்குடியான் டாட் காம் தளத்தில் வந்திருந்த அப்போது வெளியான ‘நான் கடவுள்’ படத்தின் எனது விமர்சனத்தை தனது இணைய தளத்தில் அவர் இணைத்திருந்தது அப்போதைய பெரும் மகிழ்ச்சி எனக்கு அந்நாளில்.  ‘கடல்’ படத்தின் ஆரம்ப காட்சி வசனங்கள் (அர்விந்த் சாமி, சின்னப்… (READ MORE)

பொரி கடலை

தண்ணீர் கஷ்டம் – உள்ளே, வெளியே

‘ஏங்க பவர் வராதாம். தண்ணியே இல்லை!’ உள்ளிருந்து மனைவி சொன்னதை கேட்டான் வெளியே முழங்கால் அளவு தண்ணீரில் நின்றவன்! ‪#‎சென்னை‬ தெருக்களில் ‪#‎வெள்ளம்‬ – பரமன் பச்சைமுத்து

பொரி கடலை

,

‘சென்னை மீளும்!’

அடுக்ககக் குடியிருப்புக்கு வெளியே ஆறுபோல் சுழித்து ஓடும் நீர். ‘ஐயய்யோ தண்ணி, ஆட்சியாளர்கள் அக்ரமம், ஆக்ரமிப்பால் அவதி’ என்று அலறலாம் அல்லது நீரில் நடந்து வெளியே யாருக்கேனும் உதவமுடியுமா என்று பார்க்கலாம். இரண்டாவதை தேர்ந்தெடுத்து முழங்காலளவு நீரில் இறங்கிப் போகிறேன். போகப் போக இடுப்பளவு ஆழம், போகமுடியாது என்று போலீஸ் ஒருவர் தடுக்க வேறு புறம்… (READ MORE)

Self Help, பொரி கடலை

, ,

nadigar-sangam-elction1

நம் ஞாயிறு நடிகர் சங்கத்திற்கல்ல…

நடிகர்கள் வாக்களிக்க வருவார்கள், ஊடகங்கள் இடைமறித்துக் கருத்துக் கேட்டு ஒளி பரப்பும், ரஜினி கருத்திற்கெதிராக கமல் கருத்தென்பார்கள், இரண்டு மார்க்கெட் இல்லாதவர்களை அழைத்து விவாதிப்பார்கள், விளம்பர இடைவேளை தருவார்கள், இதையேப் பார்த்துக் கொண்டிருந்தால் உங்கள் ஞாயிறு தீர்ந்து விடும். மாலை முடிவு எப்படியும் தெரியும், ஞாயிறை இதில் வீணடிக்காமல் உங்கள் நாளை பயனுள்ளதாக்குங்கள்! … வாழ்க!… (READ MORE)

Manakkudi Talkies, Self Help, பொரி கடலை

, , , , ,

Manorama - Copy

ஜாம் பஜார் ஜக்கு…

  ‘ஜாம் பஜார் ஜக்கு, நான் சைதாப்பேட்டை கொக்கு!’ என் அப்பா பாடினார், சிறுவனான நான் கேட்டு வளர்ந்தேன்.   ‘ட்ரியோனா… ட்ரியோனா… ட்ரியோனானா னானா, மெட்ராச சுத்திப் பார்க்கப் போறேன்!’ நான் பாடினேன், என் மகள்கள் கேட்டனர்.   நாளை என் மகள்கள் அவர்கள் பிள்ளைகளுக்குப் பாட? ‪ #‎RIP‬  Manorama aachi

பொரி கடலை

,

Bangalore-to-Chennai - Copy

வாழ்க்கை வழிப் பயணம்…

இரண்டாண்டுகளுக்கு முன்பு இன்ஃபினி ஆல்ஃபா பேட்ச் 9 எடுக்க பேங்களூரை நோக்கிப் பயணித்த போது, அப்போது என்னிடம் இருந்த வெள்ளை நிற ஹோண்டா சிட்டி கிருஷ்ணகிரிக்கு அருகில் டயர் பஞ்ச்ர் ஆகி நின்றது. ஆள் கூட்டி வர சில கிலோ மீட்டர் நடத்தார் குத்தாலிங்கம். ஜாக்கியை எப்படிப் பயன்படுத்தி ஸ்டெப்னி மாற்ற வேண்டும் என்று நாங்களே… (READ MORE)

Self Help, பொரி கடலை

, , , , ,

மாடு துன்பப் படக்கூடாது, மனிதன் துன்பப்படலாமா?: பரமன் பச்சைமுத்து

மாட்டிறைச்சி உண்டார் என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை, மற்ற சிலர் கூடி அடித்துத் தாக்கியுள்ளனர். இடம், ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவை. தாக்கப் பட்டவர் ரஷீத் என்னும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர். தாக்கியவர்கள், பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள். … மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒருவனை, அவ்வளவு பேர் முன்னிலையில் கூடி அடிப்பது மிருகச் செயல். மாட்டை… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , ,

Masinagudi2 - Copy

‘யானை, மனிதன் – யார் தவறு?’ – யானை புகுந்த ஊரில்…:

‘ஊருக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம், பயிர்கள் நாசம்’ என்று அடிக்கடி செய்தியில் வருவதை பார்க்கிறோம். பாதிக்கப் பட்ட இடத்திலிருந்து பார்த்தால் எப்படி இருக்கும்? நீலகிரி மலைத்தொடரில் இருக்கும் பந்திப்பூர் – முதுமலை வனச்சரகத்தில், மசினகுடியை ஒட்டியமைந்துள்ள கிராமங்கள் தொட்டலிங்கி, பொக்காபுரம், தெப்பக்காடு. … காட்டு முயல்களும், கடைமான்கள் என்று சொல்லப்படும் சாம்பா மான்பளும், புள்ளி மான்களும்,… (READ MORE)

பொரி கடலை

, ,

Lee quan yu2

எம் இனத்து இளைஞர்களை ஏற்றி விட்டவரே

இப்படி ஒரு தலைவன் என் தேசத்திற்கு கிடைக்கமாட்டானா என பலதேசத்து இளைஞர்களை ஏங்க வைத்தவர், சொற்பமாய் இருந்ததை சொர்க்கமாய் மாற்றியவர், தமிழ்நாட்டின் பல குடும்பங்களில் வறுமையொழியக் காரணமானவர், ஒன்றுமில்லாத ஓர் ஊரில் உழைப்பை ஊற்றி ஒளிரச்செய்தவர், உலகத்தையே அதை நோக்கி வரச் செய்தவர், மனிதனின் மகத்தான ஆற்றலுக்கு முன் மாதிரி, ஒரே வாழ்நாளில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு… (READ MORE)

பொரி கடலை

,

அதிக ஆசைகள் கொண்டவன் நான்…

அதிக ஆசைகள் கொண்டவன் நான். என் ஆசைகளைப் பட்டியலிட்டால்,  ‘பறவையாய் பிறந்திருக்க வேண்டியவன் பரமனாய் பிறந்து விட்டான்,’ என்று சொல்லத் தோன்றும். ஈழத்தீவிற்கு படகில் போக, இமயத்துப் பனியை இமைக்காமல் பார்க்க, நைல் நதியில் நனைந்து நிற்க, திரும்பப் போய் டோக்கியோ தெருக்களில் திரிய, சுமிதா நதியில் சுகமாய் சவாரி செய்ய,  யுரால் மலையில் ஆசியாவில்… (READ MORE)

பொரி கடலை

சிதம்பரத்தில் - Copy

சிதம்பரத்தில் ஒரு ஜோதி தெரிகிறது!

நிலத்தடி நீர் குறைகிறது, நீர் ஆதாரங்கள் சுருங்குகிறது என்றே எல்லோரும் பேசிக்கொண்டேயிருந்தால், எல்லாம் சரியாகிவிடுமா, நீர் பெருகி ஓடி வருமா? சிதம்பரத்தில் ஒரு ஜோதி தெரிகிறது. நெஞ்சில் நம்பிக்கை பிறக்கிறது. சிதம்பரம் நகரில் நிலத்தடி நீர் குறைந்தது என்ற கதை போய், சுனாமிக்கப்புறம் உப்பு நீர் வருகிறது என்பது விசனமாய் போனது. எல்லோரும் கவலை கொண்டிருக்கும்… (READ MORE)

பொரி கடலை

, ,

sachin

சுயசரிதையில் வருத்தத்தை வெளிப்படுத்தும் சச்சின்

வெளிவருவதற்கு முன்பே, கிரேய்க் சாப்பல் வீட்டிற்கு வந்து இப்படியெல்லாம் பேசினார், என் மனைவி அஞ்சலியும் நானும் இப்படியெல்லாம் வருந்தினோம் என்று சர்ச்சை கட்டி தனது சுயசரிதை நூல் பற்றிய எதிர்பார்ப்பைப் பற்ற வைத்த சச்சின், தனது ‘ப்ளேயிங் இட் மை வே’ நூலை வெளியிட்டு விட்டார். தனது பெயரை பெரிதாகப் போட்டு, நூலின் பெயரை சிறிதாகப்… (READ MORE)

பொரி கடலை

, , ,

Rajini Award

உத்திரப் பிரதேச எம்.பி.யும், உச்சநட்சித்திரம் ரஜினியும்…

இன்று வந்ததில் இரண்டு செய்திகள் கவனம் ஈர்க்கின்றன. ஒன்று – தமிழுக்காக உழைக்கும் பாஜாகாவின் தருண் விஜய். மற்றது – பாஜாகா அரசு ரஜினிக்கு தரும் விருது. உத்திரப் பிரதேச தருண் விஜய்க்கு தமிழ் மீது ஆசை, உச்ச நட்சத்திரம் ரஜினி மீது பாஜாவிற்கு ஆசை! தருணின் ஆசை நிறைவேறுவது தமிழுக்கு நல்லது. தாமரைக் கட்சியின்… (READ MORE)

Politics, பொரி கடலை

, , , , ,

எருமைமாடும், ஏரோப்ளேனும்…

“எருமைமாடு கூட ஏரோப்ளானில் இடிக்கும் அளவிற்கு வளர்ச்சி பெற்ற மாநிலம் எங்கள் மாநிலம்!” – என்று சொல்வார்களோ! #Aircraft 737 hit a buffalo in its takeoff roll in Surat(Gujarat) and got damaged – News

பொரி கடலை

,

நாய் பேசுமா?

என்ன சொன்னாலும், ‘லொள்’என்றே சப்தமெழுப்பும் நாயை ‘லவ் யூ’வென சொல்ல வைக்க முடியுமா? முயன்றிருக்கிறார் ஒருவர். பாருங்களேன். (வாட்ஸ் அப்பில் வந்தது)

பொரி கடலை

தஞ்சையில்…

என்னை மலைத்துப் போகச் செய்த, மனங்கவர்ந்த மாமன்னன் ராஜராஜனின் மண்ணில், ஆகஸ்டு 4ல் பிறந்த அவன் மகன் 52 தேசங்களை ஆண்டபோது தலைநகராய் இருந்த தஞ்சையின் வீதிகளில் உலாத்துகிறேன். வந்தியத்தேவனும், குந்தவை தேவியும், வீரநாச்சியாரும், பஞ்சன்மாதேவியும், பரவையும் நடந்த பிரதேசத்தில் சுவாசிக்கிறேன்!  

பொரி கடலை

Soorasamharam

இன்று சூரசம்ஹாரம்

தமிழ்க் கடவுள் முருகப்பெருமான் தனது வெஹிக்கிள் டெலிவரி எடுத்த தினம் இன்று. எத்தனையோ யுகங்களுக்கு முன்பு, ‘மலை மாவு சிந்த அலை வேலையஞ்ச,’ என்று திருப்புகழில் வருவதுபோல் செந்தூர் கடற்கரையில் நின்று அவன் வடிவேலெறிந்த தினம். இன்று செந்தூரின் கடற்கரை சூரசம்ஹார விழாவால் அல்லோலகல்லோலப் படும். நீல சமுத்திரமும், மனித சமுத்திரமும் சங்கமிக்கும். நாள் முழுக்க… (READ MORE)

Spirituality, பொரி கடலை

, , , ,