எம் இனத்து இளைஞர்களை ஏற்றி விட்டவரே

Lee quan yu2

Lee quan yu

இப்படி ஒரு தலைவன் என் தேசத்திற்கு கிடைக்கமாட்டானா என பலதேசத்து இளைஞர்களை ஏங்க வைத்தவர்,
சொற்பமாய் இருந்ததை சொர்க்கமாய் மாற்றியவர்,
தமிழ்நாட்டின் பல குடும்பங்களில் வறுமையொழியக் காரணமானவர்,
ஒன்றுமில்லாத ஓர் ஊரில் உழைப்பை ஊற்றி ஒளிரச்செய்தவர், உலகத்தையே அதை நோக்கி வரச் செய்தவர்,
மனிதனின் மகத்தான ஆற்றலுக்கு முன் மாதிரி,
ஒரே வாழ்நாளில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு சேர்த்து உழைத்தவர்,
சிங்கப்பூரின் சிங்கம்… ‘லீ க்வான் யூ’ உழைத்தது போதும் இனி ஓய்வெடுக்கட்டும் என்று அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டது இயற்கை.

எம் இனத்து இளைஞர்களை ஏற்றி விட்டவரே, அஞ்சலி!
துயில் கொள்ளுங்கள்.
தீபம் ஏற்றுகிறோம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *