சில விஷயங்கள் நம்ப முடியாதவையாகத் தோன்றும், ஆச்சரியப் படுத்தும், ‘நடந்தால் எவ்வளவு நல்லாருக்கும்!’ என்று ஆசைப்பட வைக்கும்.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் சமீபத்திய அறிவிப்புகள் சில நாட்களாகவே இவற்றை ஏற்படுத்துகின்றன என்னுள்.
பொது அறிவு மொழியறிவு வளர்க்க பள்ளிகளுக்கு நாளிதழ்களும் சிறுவர் இதழ்களும், மாவட்டத்திற்கு ஆறு ஆசிரியர்களுக்கு ‘கனவு ஆசிரியர்’ அங்கீகாரம், தனித் திறன் கொண்ட மாணவர்கள் வெளிநாடுகளுக்குக் கல்விப்பயணம், மதுரையில் பிரமாண்ட நூலகம், மக்களிடம் நூல் ப…ெற்று யாழ் நூலகத்திற்கு நன்கொடை, எல்லாவற்றையும் விட முக்கியமாக உலக நாடுகளில் பிற மாநிலங்களில் வாழும் தமிழ் மாணவர்கள் தாய் மொழி கற்க உதவி என திரும்பிப் பார்க்க வைத்த அல்ல ஆசைப்பட வைக்கும் அறிவிப்புகள்.
இரண்டு எண்ணங்கள் வருகின்றன.
ஒன்று – இதன் பின்னணியில் ஓர் ஐஏஎஸ் அதிகாரியோ வேறொரு அதிகாரியோ இருக்கிறார். அவர் வாழ்க!
இரண்டு – இதெல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும்!
நடக்க வேண்டும்.
பரமன் பச்சைமுத்து
16.06.2017