‘ஜெயிப்பது நிஜம்…’ – காஞ்சி மாநகரில்

‘செய் தொழிலில் நேர்த்தி’ பற்றிய ஒரு நாள் மலர்ச்சி வகுப்பு நாளை காஞ்சி மாநகரத்தில், ‘ஜெயிப்பது நிஜம்’ என்ற பெயரில்.

மலர்ச்சி மாணவர்களுக்கு இது வேண்டியிருக்காது என்று எவ்வளவு முறை கூறிய போதும், ‘எதாவது ஒரு பாயிண்ட் சர்ருன்று உள்ள எறங்கும், புது உத்வேகம் வரும் நாங்க வர்றோம்பா, பரவாயில்ல!’ ‘ தெரிஞ்சவங்கள கூட்டிட்டு வரோம், நாங்களும் வரோம், க்ரோத்தானே!’ ‘அலோ… தொடர்ச்சியா அவ்ளோ மணி நேரம் மலர்ச்சி க்ளாஸுல இருந்தா எப்படி இருக்கும்! இதப் போய் மிஸ் பண்ணலாமா! போய்யா யோவ், டிக்கெட் தருவியா!’ என்று ‘பாஸ்’கள் வாங்கியுள்ளனர் மலர்ச்சி மாணவர்கள் ஒரு இருபத்தியைந்து பேர்.

100 இருக்கைகள் கொண்ட நாளை நடக்கும் அந்த பயிற்சி வகுப்பிற்கு இதுவரை 105 ‘பாஸ்’கள் விற்றுவிட்டன.

இறையருள் துணை செய்யட்டும், எல்லோருக்கும் வளர்ச்சி கிட்டட்டும், மலர்ச்சி வரட்டும்!

கருவாக்கி உருவாக்கி எனையாண்டு காத்தருளும் இறைவா நன்றி!

வாழ்க! வளர்க!

பேரன்புடன்,

பரமன் பச்சைமுத்து

18.08.2017

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *