அரசு செய்யும் அரசு அதிகாரிகள் வருவார்கள் என்று காத்திருக்காமல் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஒருவர் என்று இறங்கி மொத்த ஊரையும் கூட்டித் துடைத்து கழுவி காயப் போட்டுள்ளனர் ஒரு ஊர் மக்கள்.
சீமைக் கருவேலத்தையும் வேண்டாப் புதர்களையும் களைந்து குப்பைகளைக் கூட்டி எரித்தும் புதைத்தும் சுத்தப் படுத்தி ஒரு ஊரையே குப்பைகளில்லா ஊராக மாற்றியிருக்கிறார்கள்.
ராமநாதபுர மாவட்டத்தின் பேராவூர் என்ற அந்த ஊரில், வீட்டிற்கு ஒருவர் என்று களமிறங்கிய அந்த மாதரசிகளுக்கும் மகன்களுக்கும் மலர்ச்சி வணக்கம்!
நல்லதைப் பாராட்டுவோம்!
Facebook.com/ParamanPage