வளர்ச்சிப் பாதை @திருவண்ணாமலை

🌸🌸

மொத்தம் இரண்டு மணி நேரம் என்று முன்பேயே அறிவித்து நடத்திய வளர்ச்சிப்பாதை இன்று திருவண்ணாமலையில்.

ஆரணியிலிருந்து சுரேஷ், சத்யா, வேலூர் குடியாத்தத்திலிருந்து சரளா ஆனந்த், திருக்கோவிலூரிலிருந்து நாமதுரை, சென்னையிலிருந்து விஜயகுமார், கார்த்திகேயன் என வேறு ஊர்களிலிருந்தும், போளூரிலிருந்தும், திருவண்ணாமலையிலிருந்து தொண்ணூறு சதவீத மலர்ச்சி மாணவர்களும் என நிறைந்ததிருந்தது வளர்ச்சிப் பாதை.
சிரிப்பு, அடி, ஆழம் என எல்லாமும் கலந்திருந்தது வளர்ச்சிப்பாதை.

வளர்ச்சிப் பாதைக்கு வந்தோர் அனைவருக்கும் இரவு உணவு தந்து அசத்தி விட்டார்கள் திருவண்ணாமலை – மலர்ச்சி மாணவர்கள் நற்சங்கத்தினர்.

வந்தோர்கள் ஊக்கம் பெற்று உற்சாகமாய் செல்கிறார்கள்.
நிறைவான உணர்வோடு சென்னையை நோக்கிப் பயணிக்கிறேன். நாளை மாலை வகுப்பிருக்கிறது.

இறைவா நன்றி!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து,
25.04.2018
திருவண்ணாமலை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *