பின்னவல –

மழைத் தண்ணீர் அடித்துக் கொண்டு செந்நிறமாக ஓடும் ‘மாஒய’ நதியில் வயிற்றளவு நீரில் இறங்கி குதூகலித்து விளையாடும் சிறிதும் பெறிதுமான காட்டு யானைகளின் கூட்டம், சில அடிகள் தூரத்தில் நின்று பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது இன்று, சிறீலங்காவின் ‘பின்னவல’ யானைகள் முகாமில். கொழும்பு நகரிலிருந்து கண்டி நோக்கிச் செல்லும் வழியில் இருக்கிறது இந்த இடம்.

காடுகளில் வசிக்கும் யானைகளில் சில காயம்பட்டும் நோய் வந்தும் தனித்து கிடப்பதைக் கண்டு அவற்றைக் காத்து குணப்படுத்தி திரும்பவும் காடுகளில் விடலாமென்ற எண்ணத்தில் சில மருத்துவர்களை வைத்துக் கொண்டு 1975ல் தொடங்கினார்களாம் இந்த அமைப்பை. இன்று அது எண்பது யானைகளாகப் பெருகி நிற்கிறது.

நீரில் ஊறுவது, கரையில் ஏறுவது, திரும்ப இறங்கித் தண்ணீரில் அடித்துக் கொண்டு வரும் தேங்காய் மட்டைகளைத் தின்பது என மகிழ்வாய் விளையாடிய யானைகள் அழகு. அதனதன் இயல்பில் அதது இருந்தாலே அழகுதானே!

– பரமன் பச்சைமுத்து
சிகிரிய, சிறீலங்கா,
15.04.2018

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *