பிளாஸ்டிக் தடை – நல்ல செய்தி!

plastic

plastic

வரும் ஜனவரி முதல் குறிப்பிட்ட சில பயன்பாடுகளில் பிளாஸ்டிக்கை தடை செய்வதாக அறிவித்திருக்கிறது அரசு. நல்ல செய்தி! சரியாக நடைமுறைப் படுத்தப்பட்டால் பல்லுயிர்ச்சூழல் கெடாது காக்கப்படலாம். பிளாஸ்டிக் பைகளை விழுங்கி வயிறு சரிந்து மாயும் யானைகளும், பிளாஸ்டிக்கால் வதைபடும் குரங்குகளும், மீன்களும், மனிதர்களும் மற்ற பிற உயிர்களும் கொஞ்சம் காக்கப்படும்.

அப்படியே… கர்நாடாகாவிலும், இலங்கையிலும் இருப்பதைப் போல விவசாய நிலங்களை மனைகளாக மாற்றுவதற்கான நேரிய ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தால் பெரும் பயனாக இருக்கும்.  யாரவது செய்யட்டும் இதை, விரைவில் செய்யட்டும்!

 

– பரமன் பச்சைமுத்து

சென்னை

06.2018

www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *