எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாதமி விருது என்றொரு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. இந்தியாவின் அசல் ‘பட்சிராஜன்’ஆகிய சலீம் அலியை அந்நாட்களில் தனது எழுத்துக்களின் மூலம் எனக்கு அறிமுகம் செய்தவர் எஸ்ரா. என்னுள்ளே பல சன்னல்களை திறந்து விட்ட எழுத்தாளர்களில் எஸ்ராவும் ஒருவர்.
‘நூலைப் படித்துவிட்டு ஒரு வாசகன் அடுத்தவருக்கு பரிந்துரைப்பதே எழுத்தாளனுக்குப் பெரிய அங்கீகாரம்!’ என்று சொல்லிக் கொண்டிருந்தவரை, இப்போது சான்றோர் சமூகம் அங்கீகரித்து சிறப்பு செய்திருக்கிறது.
வாழ்த்துக்கள் ஐயா!
– பரமன் பச்சைமுத்து
சென்னை
06.12. 2018
Facebook.com/ParamanPage