சொக்கப் பானை சுடரில்…

Sokkappanai

deepam2_2232444g

வெப்பம் குறைந்து

வென்பனி பொழியட்டும்,

எல்லோர் வாழ்விலும் குளுமை வரட்டும்

 

அந்தி மாலையில் தோன்றும்

ஆறு கார்த்திகை நட்சத்திரங்களும்

நல்ல சேதிகள் சொல்லி

மின்னட்டும்.

 

சொக்கப்பானைச் சுடரில்

சோம்பலும், சோர்வும் ஒழிந்து போகட்டும்.

 

அக இருள் அழிந்து

உள்ளே சுடர் வரட்டும்

திருக்கார்த்திகை தீப நாளில்!

 

வெளிச்சம் பெருகட்டும்,

வெற்றி வரட்டும்.

இறையருள் பெருகட்டும்,

இன்பம் வந்து சேரட்டும்!

 

ப்ரியமுடன்,

பரமன் பச்சைமுத்து

[சொக்கப் பானை = சுவர்க்கப் பானை = சிவன் கோவில்களில் கார்த்திகை தீபத்தின் போது கொளுத்தப் படும், தென்னை ஓலைகளால் மூடப்பட்ட வாழை மரம். சுட்ட பனம்பூவில் மாவு செய்து தீபத்தின்போது கார்த்தி சுத்தி நெருப்புப் பொறி செய்வதும், ஊர் கூடி சொக்கப் பானை செய்வதும் தமிழர் வழக்கம்]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *