‘யோகப் பயிற்சியை தந்தவன் கடவுளாகத்தான் இருக்க வேண்டும்!’ என்று நான் அடிக்கடி சொல்வதற்குக் காரணம் அது மதமோ கடவுளோ தந்தது எனும் பொருள் கொண்டு அல்ல, அது கொடுக்கும் உணர்வையும் ஏற்படுத்தும் மாற்றத்தையும் கண்டு அசந்து சொல்வது அது.
நாள் தவறாது தினம் யோகப்பயிற்சி செய்யும் தந்தையைப் பார்த்தே வளர்ந்தவனாகையால், அதன் பால் கொண்ட ஈர்ப்பு இயல்பானதே.
யோகப் பயிற்சியை போதிக்கும் அனைவருக்கும் மலர்ச்சி வணக்கம். பயிற்சி செய்வோர் அனைவருக்கும் வாழ்த்துகள்!
வாழ்க! வளர்க!
– பரமன் பச்சைமுத்து
சென்னை
15.11.2019
#Yoga