கொண்டாடும் தருணமிது எனக்கு!
நான் ஓர் எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ளுமளவிற்கு இன்னும் வரவில்லை, ஆனால் அதை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறேன், இறையருளால். இந்தப் பயணத்தில் ஒரு மைல் கல் இது என எண்ணுகிறேன்.
இன்று, என் பதினோராவது நூலை முழுதாக முடித்து அவர்களது வடிவில் அச்சேற்ற பதிப்பகத்தாரிடம் தந்துவிட்டேன்.
என்னைப் பொறுத்தவரை பெரு மகிழ்ச்சியூட்டும் சிறு மைல் கல்.
கொண்டாடுகிறேன்,
வானமும் கொண்டாடுகிறது என்னுடன் மாரி பொழிந்து.
இறையே நன்றி!
– பரமன் பச்சைமுத்து
சென்னை
13. 12. 2019