அடைமழை பெய்தபோதும்
ஆடற்பெருமான் அவனாகவே சென்று
அடியார் சேந்தனார் குடிலில் களி உண்டு களித்தத்
திருவாதிரை திருநாள் இன்று!
ஆயிரங்கால் மண்டபத்தில்
ஆடி ஆடி வருவதை
காணக் கண் ஆயிரம் வேண்டும்.
அழகிய சிற்றம்பலத்தான் அருள் மழை பொழியட்டும்,…
அகிலத்தோர் வாழ்வு சிறக்கட்டும்.
அமைதி வரட்டும்!
: பரமன் பச்சைமுத்து