எருக்கூர் மக்களுக்கு வணக்கம்

பணத்திற்கு ஆசைப்பட்டு திட்டம் போட்டு ராஜஸ்தானிலிருந்து நண்பர்களை வரவழைத்து சீர்காழியில் தான் பணிபுரியும் வீட்டிலேயே இரட்டைக் கொலைகள் செய்து நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்த கொள்ளையர்களை நான்கு மணி நேரத்தில் பிடித்த காவல்துறைக்கு பாராட்டுக்கள்.

காரை பாதி வழியில் நிறுத்தி விட்டு
நகையையும் பணத்தையும் எடுத்துக் கொண்டு வயல் வழியே போன கொள்ளையர்களை ‘யார்ரா நீங்க? இங்க என்ன செய்யறீங்க?’ என்று விசாரித்த, அவர்களது பதிலிலும் நடத்தையிலும் சந்தேகம் கொண்டு காவல்துறைக்கு சொன்ன அந்த எருக்கூர் மக்களுக்கு மலர்ச்சி வணக்கம்.

‘எவனோ போறான், நாம நம்ம வயல் வேலையைப் பாப்போமா!’ என்றில்லாமல், ‘என்னவோ தப்பாருக்கே!’ என்று அக்கரை கொண்டு செயல்பட்ட வயல்வெளியில் இருந்த அந்த மக்கள் போற்றத்தக்கவர்கள்

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
29.01.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *