இந்த நீதிபதிகள் மதிக்கத் தக்கவர்கள்.

இந்த நீதிபதிகள் மதிக்கத் தக்கவர்கள்.

அடையாறு ஆற்றையும் கூவம் ஆற்றையும் காப்பாற்றச் சொல்லி அரசுக்கு நீதிமன்ற பரிந்துரை தந்திருக்கிறார்கள். சென்னை நகரின் இந்நதிகளை தூர்வாரி தூய்மைப்படுத்த வழி சொல்லியிருக்கிறார்கள். நகருக்கே வெளியே கழிவுகளை சுத்திகரிக்கும் நிலையம் வைத்து ஒரே நேரத்தில் நகருக்கும் நன்மை ஊருக்கு வெளியே விவசாயத்திற்கும் நன்மை என்றோர் வழியை சொல்லியிருக்கிறார்கள். பழைய படி படகுப் போக்குவரத்திற்கும் பச்சைக் கொடி தந்திருக்கிறார்கள்.

நதிகளைக் காக்க இவர்கள் செய்த நீதிமன்ற பரிந்துரை நகரத்து மக்களை காக்கும்.
யாரும் வழக்குத் தொடுக்காமல் தாமாகவே இந்தப் பிரச்சினையை எடுத்துக்கொண்டு நீதிமன்றத்தில் வைத்து பரிந்துரை செய்த இந்த நீதிபதிகள் பாராட்டத்தக்கவர்கள்!
எழுந்து நின்று கைதட்டுகிறோம்!

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
25.03.2017

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *