கி.பி. 1180ல் மதுரையில் பறந்த பாண்டியர்களின் மீனக் கொடியையும் அவர்களது நேசப் படையான சிங்களவர்களின் ஈழக்கொடியையும் முறித்து மூன்றாம் குலோத்துங்கச் சோழன் புலிக்கொடியை பறக்க விட்ட காலத்தில் நடந்தவற்றை களமாக கொண்ட சரித்திர புனைவு.
எஸ்ராவால் சிறந்த நூல் என்று பரிந்துரைக்கப் பட்டிருக்கும் இந்த நாவல் நடிகர் திலகம் நடித்த ராஜராஜசோழன் திரைப்படத்துக்கு கதை வசனமெழுதிய அரு. ராமநாதனால் எழுதப்பட்டது ( ஆமாம், நம் மலர்ச்சி மாணவர் அபி வைரவன் ராமநாதனின் தாத்தா).
சரித்திர நாவலில் திளைக்க விரும்புவோர், நிச்சயம் படியுங்கள்.
– பரமன் பச்சைமுத்து
23.01.2018