பொங்கலுக்கு மணக்குடியில் நான்!

20190113_2249318551722713569734407.jpg

பால் நிலவொளியில்
பனியிறங்கிக் குளிர்ந்து
விறைத்து நிற்கும் எலுமிச்சை இலைகள்

எட்டு மணிக்கே
இரவு உணவை முடித்து
ஏறக்கட்டி அடங்கிவிட்ட ஊர்

எலந்தாரிப் பையன்கள் எல்லாம்
பிழைக்கப் பட்டினம் போனதால்

இரவு இன்றும் இரவாகவே
இருக்கிறது எங்களூரில்,
எந்த தொலைக்காட்சி வந்த போதும்!

பொங்கலுக்கு மணக்குடியில் நான்!

– பரமன் பச்சைமுத்து
மணக்குடி
13.01.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *