பால் நிலவொளியில்
பனியிறங்கிக் குளிர்ந்து
விறைத்து நிற்கும் எலுமிச்சை இலைகள்
எட்டு மணிக்கே
இரவு உணவை முடித்து
ஏறக்கட்டி அடங்கிவிட்ட ஊர்
எலந்தாரிப் பையன்கள் எல்லாம்
பிழைக்கப் பட்டினம் போனதால்
இரவு இன்றும் இரவாகவே
இருக்கிறது எங்களூரில்,
எந்த தொலைக்காட்சி வந்த போதும்!
பொங்கலுக்கு மணக்குடியில் நான்!
– பரமன் பச்சைமுத்து
மணக்குடி
13.01.2019