திருவண்ணாமலைக்கு பயணித்த வழியில் தேநீருக்கு இறங்கிய திண்டிவனம் நெடுஞ்சாலைத் தேநீர் கடையில் எவரோ ஒருவர் அடுத்தவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
‘ஏ… ஒரு மாசம்… ஒரு மாசம் ஃபுல்லா எதுவும் தொட மாட்டோம் பாத்துக்க. பொரட்டாசி மாதம்! முழு சுத்தமா இருப்பமே நாங்க!’
‘நாங்க கூடத்தான், சபரிமலைக்கு மாலை போடும் போது!’
….
‘எப்பவுமே எல்லா மாசமுமே நாங்க இப்படித்தான் இருக்கோம்யா!’ என்று எனக்குள் சொல்லிக் கொண்டு சிரித்தேன்.
….
எப்போதும் செய்வதை விட எப்போதாவது செய்வது பெரிதாகத் தெரிந்து விடுகிறது.
எப்போதும் செய்வது இயல்பாகக் கொள்ளப்படுகிறது, எப்போதாவது செய்வது கொண்டாடப்படுகிறது.
– பரமன் பச்சைமுத்து
திருவண்ணாமலை,
05.10.2019