முழுமலர்ச்சி பேட்ச் 50

wp-1611081883996.jpg

வானின் நீல நிற சட்டையும், யானை பழுப்பு நிற கோட்டும் அணிந்து கொண்டு ராயப்பேட்டை மேம்பாலத்தின் அருகிலிருந்த அந்த ஹோட்டலின் பேங்கொயட் ஹாலுக்குள் நுழைந்ததும், விஜய் சிவா படிகளில் என்னைப் படம் பிடித்ததும், சுதர்சனா, குத்தாலிங்கம், ராஜலட்சுமி, ஜெயகாந்தன், பூர்ணிமா நீத்து, பாலாஜி, அனீஷ் அன்பரசன், ஜெயந்தி, முத்துக்குமார், மோகன்குமார், கார்த்திகேயன், தனுஜா, சக்திவேல், அருள்பிரகாசம், வனஜா என மாணவர்கள் நிறைந்திருந்த அந்த அரங்கில் அந்த பிப்ரவரியின் முதல் திங்களன்று தொடங்கிய மலர்ச்சியின் முழுமலர்ச்சி முதல் பேட்ச், முதல் வகுப்பு இதோ சற்று முன்புதான் தொடங்கப்பட்டது போல இருக்கிறது. திரும்பிப் பார்ப்பதற்குள் ஆண்டுகள் பறந்தோடி விட்டன.

பெருங்கருணை புரியும் இறைவனின் அருளால்,
இதோ இன்று 50வது பேட்சில் நுழைகிறோம்.

நிறைய மலர்ச்சி மாணவர்களின் முகங்களும், அவர்களது பகிர்வுகளும், புதிய பல துவக்கங்களும், கொண்ட மாற்றங்களும், கண்ட பயணங்களும் ஓடிக்கொண்டே இருக்கின்றன உள்ளே.

காஞ்சிபுரம், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, அரக்கோணம், சென்னை என பல ஊர்களிலிருந்தும் மாணவர்கள் சேர்ந்திருக்கும் அரங்கு நிறைந்த ஐம்பதாவது பேட்ச் முழுமலர்ச்சி. 

வானுயர குதித்துக் கொண்டாடுகிறேன்!
இதயத்தின் அடியாழ்த்திலிருந்து நன்றியில் நனைகிறேன்!

இறையே!  இறையே…
இறையே என் இறையே!
நன்றி!

என்னையும் ஆண்டு கொண்டு
எமக்கருள் புரியும்

இறையே… இறையே!
இறையே என் இறையே!
நன்றி!

சரணம்!

– பரமன் பச்சைமுத்து
முழுமலர்ச்சி பேட்ச் 50
19.01.2021

Facebook.com/ParamanPage

#MalarchiBatch50
#50thBatch
#MuzhuMalarchi50
#Malarchi50

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *