என் மனைவி பள்ளிக்குப் போகிறாள்…

என் மனைவி பள்ளிக்குப் போகிறாள்…

கொரோனா தீ நுண்மி முடக்கத்திற்குப் பிறகு, நீண்ட காலம் கழித்து பள்ளி திறக்கப்பட்டது இன்று.
வகுப்புகளில் மர பெஞ்சுகள் நீக்கப்பட்டு தனி நபர் இடைவெளி நெறியோடு நாற்காலிகள் சிறு மேசைகள் போடப்பட்டுள்ளனவாம் மாணவர்கள் அமர்வதற்கு. கழிப்பறைகளில் தொடாமல் இயங்குவதற்கு தானியங்கி தண்ணீர்க்குழாய்களாம். நுழையுமிடம் தொடங்கி ஒவ்வொரு தளத்திலும் முக்கிய இடங்களிலும் கால்களால் மிதித்தால் கிருமிநாசினியை பீச்சும் அமைப்புகள் செய்யப்பட்டுள்ளனவாம்.  எல்லோரும் சுவாசக் கவசம் அணிந்து வர வேண்டுமாம்.  இன்றிலிருந்து புதிய மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பமும் தருகிறார்களாம்.

நீண்ட காலம் கழித்து, இளம்சிவப்பு நிற N 95 சுவாசக்கவசம் அணிந்து ஒரு புதிய மாணவி போல கலவையான உணர்வுகளோடு பள்ளிப் பையையும் மதிய உணவையும் எடுத்துக் கொண்டு தன் வகுப்பு மாணவர்களை பார்க்கும் ஆர்வத்தில்  பள்ளிக்குப் புறப்பட்டுப் போனாள் என் மனைவி.
என் மனைவி பள்ளி ஆசிரியை!

– பரமன் பச்சைமுத்து
19.01.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *