இந்த அரசியல்வாதிகள் செய்யும் அட்ராசிட்டிகள் தாள முடியவில்லை.
ஜார்கண்ட் மாநில பேரவை வளாகத்தில் முஸ்லீம் எம்எல்ஏக்கள் தொழுகை நடத்த ஓர் அறை ஒதுக்கப்பட்டது. அதை எதிர்த்து போராட்டம், தடியடி, தண்ணீர் பீச்சியடித்தல். தொழுகை நடத்த ஓரிடம் ஒதுக்கியதற்கு ஏன் இவ்வளவு பிரச்சினை! பண்ணிட்டு போகட்டுமே!
வேறு கட்சிகாரர்கள் திமுகவின் சின்னத்தில் நின்று ஜனநாயகத்தை ஏமாற்றுகின்றனர், தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகியும் எம்எல்ஏவுமான ரவிக்குமார், ‘நான் திமுக உறுப்பினர். உறுப்பினர் அட்டை உள்ளது’ என்று கூறியுள்ளார்.
தப்பிப்பதற்கு எதையும் செய்யலாம், எப்படியும் பேசலாம் என்பது அரசியல்வாதிகளுக்கு இயல்பான செயல் போல.
என்ன சொல்வது இதற்கு!
– மணக்குடி மண்டு
09.09.2021