நல்ல அறிவிப்பு: அரசுப் பள்ளிகளில்…

👏

கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகள், முதல் தலைமுறைப் பட்டதாரிகள் ஆகியவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என்பதோடு ‘அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கும் பணியில் முன்னுரிமை!’ என்று அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

👏👏

சபாஷ்!

சென்ற ஆட்சியிலிருந்தே அரசுப்பள்ளிகளை நோக்கி பிள்ளைகளை பெற்றோர் கொண்டு வருவது கணிசமாக உயர்த்தொடங்கியது என்பதை மறுக்க முடியாது. இப்போது இன்னும் கூடவே செய்கிறது எண்ணிக்கை. புதிய அரசு அரசுப்பள்ளிகளில் நிறைய கவனம் செலுத்த விரும்புவதை காண முடிகிறது. நல்ல விஷயம்.
பல ஊர்களில் ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று பேசி பிள்ளைகளை சேர்க்கச் சொல்லி உழைப்பதையும் செய்திகளில் பார்க்கிறோமே.

இந்த புதிய அறிவிப்பால், அரசுப் பள்ளிக்கு வருவது நிச்சயம் உயர வாய்ப்புகள் உண்டு.

எல்லோரும் சேர்ந்து கல்வித்தேரை இழுப்போம்.
அரசுப்பள்ளிகள் உயர்வு பெறட்டும்!

வாழ்க!

  • பரமன் பச்சைமுத்து
    13.09.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *