கள்ளக்குறிச்சி பற்றி வேறு ஒன்று கவனத்தில் வந்தது.
கல்வராயன் மலையினடிவாரத்தில் அமைந்தது என்பதால் அதன் அசல் பெயர் ‘கல்லக்’குறிச்சி, தவறாக மருவி ‘கள்ளக்’குறிச்சி என்றாகிவிட்டது என்கிறார் கி. வைத்தியநாதன். 1962ல் புலவர் வரதராசனாரால் தொடங்கப்பட்டு இன்று வரை தமிழ்ப்பணியில் சிறப்பாக இயங்கும் ‘கல்லைத் தமிழ்ச்சங்கம்’ அமைப்பை உதாரணமாக காட்டுகிறார்.
‘காவிரிப்பூம்பட்டினம்’ போல பழைய சரியான பெயர்கள் திரும்ப சூடப்பட்டால் நன்றாக இருக்கும்தானே!
– பரமன் பச்சைமுத்து
30.06.2024
#Kallakurichi #KallaiThamizhSangam #Dinamani #ParamanPachaimuthu #பரமன் #பரமன்பச்சைமுத்து #கள்ளக்குறிச்சி #கல்லை #கல்லக்குறிச்சி