வரட்டும் ‘வேள் பாரி’

சு. வெங்கடேசன் இருக்கும் இடத்திலிருந்தே நம்மை பச்சைமலைத் தொடருக்கும், வேட்டுவன் பாறைக்கும் கடத்திப் போய் விடுகிறார். மணியம் செல்வம் பறம்பு மலை வீரனையும், கபிலரையும் காட்சிப் படுத்தி உயிர் தந்துவிடுகிறார். ‘வேள் பாரி’ இன்னொரு ‘பொன்னியின் செல்வன்’ ஆகுமா தெரியாது. ஆனால், தமிழ் உலகின் தலைமுறைகள் கடந்து தாக்கத்தை உருவாக்கும். இதைத்தான் பெரும் ஊடகங்கள் செய்ய வேண்டும். விகடன் செய்கிறது. நண்பர்களை படிக்கச் சொல்லி பரிந்துரைத்து விட்டேன். விகடனின் இந்த பணியை எழுந்து நின்று பாராட்டுகிறேன். 

அடுத்த வாரம் பாரி வருவான் என்று காத்திருக்கிறேன்.
பரமன் பச்சைமுத்து 

23.10.2016

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *