வாழ்க்கை எல்லா மனிதர்களின் வாழ்விலேயும் எண்ணற்ற பல நிகழ்வுகளை நடத்திக் கொண்டேதான் இருக்கிறது. சில நிகழ்வுகள் கவனிக்கப்படுகின்றன. சில நிகழ்வுகள் வெளிச்சம் பெறாமலேயே போய் விடுகின்றன. அந்த நிகழ்வுகள் மனிதர்களை என்ன செய்கின்றன, அந்த நிகழ்வுகளுக்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்பனவற்றைக் கொண்டே சிலசமயம் அவர்களது வாழ்வு மாறிவிகிறது.
ஒவ்வொரு மனிதனும் சில பல அனுபவங்களால் கட்டமைக்கப் பட்டவனே. வாழ்க்கையைப் பொருத்தமட்டில் ஒவ்வொரு மனிதனும் முக்கியமானவானே. ஒவ்வொரு மனிதனும் எண்ணற்ற அனுபவங்களின் தொகுப்பாகவே திரிகின்றான்.
நம் வாழ்வில் சில சங்கதிகள் நடந்தேறி அதன் பின்னரே கற்கவேண்டுமென்றில்லை, அடுத்தவர் வாழ்வின் சில தருணங்களைக் கவனித்தாலே போதும். சர்வவல்லமை படைத்த ஒருவரிடமிருந்துதான் என்றில்லை, சாமானியனின் வாழ்விலிருந்தும் கற்கலாம்.
(காலை கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு என்னைக் கூட்டி வந்த கார் ஓட்டுனரிடம் பேசிய பின்பு எழுந்த எண்ணத்தால் எழுதியது!)
பரமன் பச்சைமுத்து
04.12.2016
Facebook.com/ParamanPage