பச்சைக் கடல் சிஷெல்ஸ்

இந்துமாக் கடலின் இந்தக் கோடியில் நீர் பச்சையாக இருக்குமென்று அறியேன், சிஷெல்ஸ் வந்திறங்கும் வரை.

தமிழ் மன்றத்தில் மலர்ச்சி உரையாற்ற வந்த என்னை ஊர் சுற்றிக் காட்டிய இவ்வூர் நண்பர்கள் இங்கேயும் அழைத்துச் சென்றனர். மலையும் மலையின் பச்சைப் பசேல் காட்டையொட்டிய கடலின் பச்சை நிற நீரையும் பார்த்துப் பரவசப் பட்டேன்.

இறங்கிக் மூழ்கிக் குளித்துக் களித்தேன். அலைகள் அடங்கிய கடல். மறக்கவொன்னா நல்லனுபவம் அது.

ஐரோப்பியர்கள் ஏன் சிஷெல்ஸை சுவர்க்கமாக கொண்டாடுகிறார்கள் என்று புரிந்தது.

இறைவனுக்கு நன்றி!

பரமன் பச்சைமுத்து

போ வாலான், சிஷெல்ஸ்,

24.09.2017

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *