தமிழ் எழுத்து நடையை தமிழ் எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தலாமென்ற எண்ணத்தில் மகள்களை அமர வைத்து, ஒரு நூலை எடுத்துக் கொண்டு, ஒரு கதை சொல்லியாக உருவெடுத்து வரிகளைப் படித்துப் படித்து விளக்கிக்கினேன். மகள்கள் மெல்ல மெல்ல கதையில் ஆழ்ந்து ஒன்றிப் போனார்கள். ‘மறுநாள் அந்திவேளை அழகு பங்களா வீட்டின் அதே திண்ணையில்… ‘ என்று இறுதி வரிகளைப் படித்ததும், ‘அய்யோ! அப்ப பாம்பே போனவன் திரும்பி வரலிய்யா?!’ என்று அதிர்ந்து சமையல் கட்டிலிருந்து குரல் கொடுத்தாள் என் மனைவி. (கதை அவளையும் இழுத்து விட்டது!)
‘ வாட்!! ‘ ‘ஓ!’ என்றார்கள் முடிவைக் கேட்ட மகள்கள்.
2018ல் என் மகள்களையும் மனைவியையும் அசைத்த அந்தக் கதை 1951ல் எழுதப்பட்டது, எழுதியவர் சுந்தர ராமசாமி . கதை – ‘முதலும் முடிவும்’ ( சுந்தர ராமசாமி கதைகள் தொகுப்பு)
புத்தகத்தை மூடி வைத்தேன். அவர்கள் உள்ளே எதுவோ திறக்கப்பட்டிருக்கும்.
– பரமன் பச்சைமுத்து
05.01.2018
சென்னை
Facebook.com/ParamanPage