ஐயய்யப்பா…. உஸ்ஸ்… என்னா வெய்யிலு!’

screenshot_20180330-143804791243021.jpg

‘ஐயய்யப்பா…. உஸ்ஸ்… என்னா வெய்யிலு!’

என் அடுக்ககத்தின் அடித்தளத்தில் மின் தூக்கிக்காகக் காத்திருக்கும் ஒரு பெண்மணி அருகிலிருந்த சுவற்றிடம் தன் அங்கலாய்ப்பைக் கொட்டிக் கொண்டிருந்தார்.

அதைக் கேட்டுக் கொண்டே இரண்டாவது மாடி நோக்கி நடக்க படிகளில் ஏறுகிறேன் ‘மிஸ்டர் கூல்’ஆக.

திருவண்ணாமலை செங்கத்தின் வெக்கை உமிழும் 41 டிகிரியையே பார்த்தவனுக்கு, சென்னை ஆர் ஏ புரத்தின் 33 டிகிரி ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்பதே இந்த ‘மிஸ்டர் கூல்’லுக்கான காரணம்.

வாழ்க்கை எப்போதுமே காட்டமான சில அனுபவங்களைத் தந்து தயார் படுத்தி வைத்து விடுகிறது, பின்னாளைய நல்வாழ்விற்காக. வாழ்க்கை எதையும் வீண்டிப்பதில்லை. எல்லாமே உருவாக்கம்தான்!

நன்றி வாழ்க்கையே! லவ் யூ ஜிந்தகீ!

பரமன் பச்சைமுத்து

சென்னை

02.04.2018

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *