தீபாவளி மழை

rain

பட்டாசு நமுத்துப் போய் விடுமே… வெடிக்குமா வெடிக்காதா,
வியாபாரம் நன்றாய் நடக்க வேண்டுமே,
பட்டுப் புடவை கிடைக்குமோ கிடைக்காதோ,
இதில் எப்படிப் பேருந்துப் பிடித்து ஊர் போய் சேர்வது,
சே! தலையை அடகு வைத்தே தலை தீபாவளி…
இந்தக் கவலைகள் எல்லாம் அப்புறம்.

முதலில்
நரகாசுரன் வதமே நடக்குமா நடக்காதா
என்று  கவலைப்படுமளவிற்கு
விடாமல்
பேய் மாதிரி பெய்கிறது
மழை!

: பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *