முப்பத்திமூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக வீட்டை விட்டு வெளியூரி்ல் தங்கி கல்லூரியில் படிக்கப் போனபோது, என் அம்மா அழுதார்களாம், சில நாட்கள் தொடர்ந்து. நான் சிரித்தபடியே உற்சாகமாகப் புறப்பட்டுப் போனேன்.
இன்று என் மகளை படிப்பிற்காக வெளியூர் அனுப்பும் வேளையில் என் கண்களில் எட்டிப்பார்க்கிறது கண்ணீர். சிரித்தபடியே உற்சாகமாகப் புறப்பட்டுப் போகிறாள் மகள்!
- பரமன் பச்சைமுத்து
06.03.2021