தமிழ் எழுத்துலகிற்கு…

‘மலையாளம், வங்காளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இலக்கியத்திற்கும் எழுத்தாளர்களுக்கும் அரசும் பொதுவெளியும் மரியாதை தருகிறது. தமிழில் சினிமா தாண்டி கலை குறிப்பாய் எழுத்தாளர் மதிக்கப்படுவதில்லை. வாடகை வீட்டில் சேகரித்த நூல்களோடு செத்துப் போகிறான் எழுத்தாளன். எழுத்தாளர்களை உயர்த்தி தமிழுக்கு ஞானபீடம் கிடைக்க வழி செய்யுங்கள், வரலாற்றில் நிற்பீர்கள்’ என்று குமுதத்தில் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதினார் எழுத்தாளர் சாருநிவேதிதா.  

முதல்வர் அதைப் படித்துவிட்டு தமிழ் எழுத்தாளர்களுக்கு செய்ய வேண்டியதை சொல்லி தலைமைச் செயலரை முடுக்கி விட, இறையன்பு அவர்கள் சாருநிவேதிதாவுக்கு ஃபோன் பண்ணி பேசியே விட்டாராம். இது எல்லாம் அடுத்த வாரக் குமுதம் வருவதற்குள்.

செம ஸ்பீட்ல செயல்படுது போல அரசு. சபாஷ்!

– மணக்குடி மண்டு
02.06.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *