👏👏
நடந்தே விட்டது அது!
குமுதத்தில் ‘ஸ்டாலினுக்கு கடிதம்’ எழுதியிருந்த எழுத்தாளர் சாருநிவேதிதா, ‘மலையாளம், வங்காளம், கன்னடம் ஆகியவற்றில் இருப்பது போல எழுத்தாளர்களுக்கு மரியாதை உயர்த்தப்பட வேண்டும். எழுத்தாளன் வாழ்நாள் முழுக்க சேகரித்த நூல்களை இடம் இடமாக வாடகை வீடுகளுக்கு மாற்றி மாற்றி செத்தே போகிறான். பெரிய எழுத்தாளர்களுக்கு வீடு ஏற்பாடு செய்து தர வேண்டும். பத்தோடு பதினொன்றாக
கலைமாமணி வேண்டாம்.’ என்றெல்லாம் எழுதியிருந்தார்.
நேற்று ‘எழுத்தாளர்களுக்கு வீடும், ‘இலக்கிய மாமணி’ விருதும் வழங்கப்படும்’ என்று முதல்வர் அறிவிப்பு.
இலக்கிய எழுத்தாளர்களுக்கு செய்யும் தமிழக முதல்வருக்கும், இதை சுட்டி பரிந்துரைத்த சாருநிவேதிதாவிற்கும் நன்றி!
வாழ்க!
- பரமன் பச்சைமுத்து
04.06.2021