செல்வ மகள் எழுதிய ஆங்கிலக் கவிதை
தேர்வாகி பிரசுரமாயிற்று பள்ளி அறிவிப்பு பலகையில்.
இரை தவிர்த்து இறை தேடி ஓடும் நாயன்மாரைப் போல் ஓடினேன் இறைக்க இறைக்க.
கண்ணாடிக் கூண்டின் வெள்ளைத்தாள் வரிகளில் விரைகையில் வாய் சொன்னது
” கவிதை எழுதிய கவிதை!”
:பரமன் பச்சைமுத்து