எல்லாம் வல்லவனே,
என்னைப் படைத்தவனே…
எல்லாவற்றுக்கும் மேலானவனே,
எல்லை இல்லாதானே…
அகிலத்தையும், பெருங்கடலையும் படைத்த
அருட்பெருங்கடலே…
வெறும் இந்திரியத் துளியிலிருந்து
கரு, உரு, உயிர், வாழ்வு தந்தனையே…
ஏதோ ஒன்றாகப் படைக்காமல் எல்லாம் கிடைக்கப் பொருந்திய மனிதனாகப் படைத்தாயே!
நன்றி!
உணவை, பானத்தை, இச்சையை துறந்து
இறையெண்ணம் வளர்த்து
தூய்மை கொள்ளும்
ஈகைப் பெருநாளில்
வணங்கித் தொழுகிறேன்
இறைவா!
நல்வழிப்படுத்து,
என்னையும்,
என்னை சுற்றியுள்ளோரையும்!
இம்மையில் காத்தருள்,
மறுமையில் நற்கூலி கொடு!
வணங்கித் தொழுகிறேன்…
– பரமன் பச்சைமுத்து
Eid Mubrak